ஏற்காடு மலைப்பாதையில் காலாவதி மருந்து,மாத்திரைகள் வீச்சு - விசாரணை

ஏற்காடு மலைப்பாதையில் காலாவதி மருந்து,மாத்திரைகள் வீச்சு - விசாரணை
மலைப்பாதையில் வீசப்பட்ட காலாவதி மருந்துகள் 
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் காலாவதியான மருந்து மாத்திரைகளை வீசி சென்றுள்ளனர். இது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, நேற்று மாலை காலாவதியான மருந்து மாத்திரைகள் வீசப்பட்ட இடத்தில் வனத்துறையினர் மற்றும் பறக்கும் படையினர் ஆய்வு செய்தனர். காலாவதியான மருந்து மாத்திரைகள் எந்த நோய்க்காக சாப்பிடக்கூடியது. அதன் தயாரிப்பு தேதி, மருந்து கம்பெனியின் பெயர் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் இந்த மருந்து மாத்திரைகளை வீசி சென்றது யார்? என்பது குறித்தும் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story