வெள்ளநிவாரண பொருட்கள் அனுப்பிய விருதுநகர் பாஜகவினர்

வெள்ளநிவாரண பொருட்கள் அனுப்பிய விருதுநகர் பாஜகவினர்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலிக்கு பாஜக சார்பில் 10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி நடைபெற்றது*
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலிக்கு பாஜக சார்பில் 10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி நடைபெற்றது
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தென் தமிழகத்தின் கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர் . அவளுக்கு உதவும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் நிவாரண பொருட்களை அனுப்பிவரும் நிலையில் பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில் விருதுநகர் மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து 10 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அனுப்பும் பணி நடைபெற்றது. பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் ஏற்பாட்டின் படி இரவு உணவு மற்றும் ஆயிரம் நபர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு தயார் செய்யப்பட்டு திருநெல்வேலிக்கு அனுப்பும் பணியில் பாஜக மாநில தலைவர் கலந்து கொண்டு கண்டெய்னர் லாரியை கொடி அசைத்துதொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் மற்றும் தொழிலதிபர் பென்டகன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஜவகர் ஆகியோர் கலந்து கொண்டு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story