ஏழை மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கல்

ஏழை மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கல்
சாணார்பட்டியில் பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
சாணார்பட்டி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவ, மாணவிகளுக்கு டிக்ஸ்னரி, எழுதுகோல் மற்றும் புத்தகங்கள் வழங்கி ஊக்கப்படுத்தினார். கிராமப்புற ஏழை மாணவ மாணவிகளின் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஷெர்லின் ஷீபா மற்றும் தச்சுத் தொழிலாளியின் மகன் சர்வான் ஆகியோரை நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்து பரிசு பொருட்களை வழங்கி உற்சாகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேகர் மற்றும் சுகாதார ஆய்வாளர் முனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்‌.

Tags

Next Story