அரியலூரில் விசிகவினர் மாநாட்டு துண்டு பிரச்சுரம் வழங்கல்

அரியலூரில் விசிகவினர் மாநாட்டு துண்டு பிரச்சுரம் வழங்கல்

துண்டு பிரசுரங்கள் விநியோகம் 

அரியலூரில் விசிகவினர் மாநாட்டு துண்டு பிரச்சுரம் வழங்கப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஜனவரி 26 ஆம் தேதி திருச்சியில், வெல்லும் ஜனநாயக மாநாடு நடைபெற உள்ளது. இதுகுறித்த துண்டு பிரச்சரங்கள் வழங்கும் நிகழ்ச்சி மேற்கு மாவட்ட செயலாளர் அங்கனூர் சிவா தலைமையில், அரியலூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைப்பெற்றது.

இதில் அக்கட்சியினர் கலந்து கொண்டு பேருந்து நிலையம், உழவர் சந்தை, தேரடி, சத்திரம், மாதா கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து மாநாட்டு துண்டு பிரச்சுரங்களை வழங்கினர். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, முகாம் பொருப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story