விராலிமலையில் இடுபொருட்கள் வினியோகம்!

விராலிமலையில்  இடுபொருட்கள் வினியோகம்!


விராலிமலையில் தானம் அறக்கட்டளை சார்பில் விவசாயிகளுக்கு விவசாய இடுப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.


விராலிமலையில் தானம் அறக்கட்டளை சார்பில் விவசாயிகளுக்கு விவசாய இடுப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

விராலிமலையில் ஐடிசி உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் தானம் அறக்கட்டளை சார்பில் விவசாயிகளுக்கு விவசாய இடுப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிறுவன மேலாளர் விஸ் வநாத் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு தலைவர் காமுமணி, தாசில்தார் கருப்பையா, கால்நடை டாக்டர் ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராஜகிரி பகுதியை சேர்ந்த விவசாயி முருகேசன், வாணதிரையான்பட்டி இளம் விவசாயி செல்வகுமார் ஆகியோர் தங்களது அனுபவத்தை விளக்கி கூறினர். சிறந்த விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் விவசாயிகளுக்கான வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டன.

ஐடிசி மனித வள மேம் பாட்டுபிரிவு மேலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள், தானம் அறக்கட்டளை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வரவேற்றார். அலுவலர் கண்ணன் நன்றி கூறினார்.

Tags

Next Story