ஊத்தங்கரையில் போக்குவரத்து ஊழியர்கள் நோட்டீஸ் விநியோகம்

ஊத்தங்கரையில் போக்குவரத்து ஊழியர்கள் நோட்டீஸ் விநியோகம்
துண்டு பிரசுரங்கள் விநியோகம்
ஊத்தங்கரையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக நோட்டீஸ் விநியோகம் செய்தனர்.1

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ரவுண்டானாவில் போக்குவரத்து ஊழியர்கள், வேலை நிறுத்த போராட்டத்திற்க்கு ஆதரவு கோரி, பொதுமக்களிடம் நோட்டீஸ் கொடுத்தனர்.

இதில், போக்குவரத்து கழகங்களை பாதுகாக்கவும், தமிழக மக்களின் பயண உரிமையை நிலை நிறுத்தவும், ஓய்வு பெற்ற, பணியில் உள்ள ஊழியர்களின் நலன் காக்கவும் வேலை நிறுத்தத்தை தவிர வேறு வழியில்லை,

போராட்டத்தை நோக்கி தள்ளியது அரசுதான் என, நோட்டிஸ்களை வழங்கி ஆதரவு கோரி வருகின்றனர். இதில் போக்குவரத்து ஊழியர்கள் ரங்கன் தலைமையில், முனிராஜ், ராமமூர்த்தி, சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story