மீனவர் நலத்துறை சார்பாக பரிசல் வழங்கல்

மீனவர் நலத்துறை சார்பாக பரிசல் வழங்கல்

மீனவர்களுக்கு பரிசல் வழங்கல் 

பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர்களுக்கு பரிசல் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு, ஜனதா நகர் உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான மீனவ குடும்பங்கள் உள்ளது. மேலும் காவிரி ஆற்றை நம்பி மீன் பிடி தொழிலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மேட்டூர் அணை சார்பாக மாநில நிதியில் இருந்து ,50 சதவீதம் பரிசல் மானியத்தில் பள்ளி பாளையத்தில் 10 மீனவர்களுக்கு பரிசல் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் செல்வராஜ் ,மீனவர் நலத்துறை துணை இயக்குனர் தர்மபுரி மண்டலம் சுப்பிரமணியன், உதவி இயக்குனர் உமா கலைச்செல்வி, மீன்வள ஆய்வாளர் நாமக்கல் கலைவாணி , திமுக மாவட்ட மேலூர் அணி துணை அமைப்பாளர் முருகன் மற்றும் பள்ளிபாளையம் நகர மன்ற உறுப்பினர்கள் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் .

Tags

Next Story