செய்யாறு அருகே 1228 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கல்

செய்யாறு அருகே 1228 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கல்

பட்டா வழங்கல்

செய்யாறு அருகே 1228 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டது.

செய்யூர் வட்டம்,பேரம்பாக்கத்தில், முன்னாள் முதலமைச்சர் டாக்டர்.கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு,வருவாய் மற்றும் பேரிடர் நலத்துறையின் சார்பில் பட்டா வழங்கும் விழாவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் மற்றும் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் மு.பாபு ஆகியோர் முன்னிலையில்,

மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் தலைமையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்யூர் வட்டத்தை சேர்ந்த 1228 பயனாளிகளுக்கு ரூ.11.99 கோடி மதிப்பீட்டில் பட்டாக்களை வழங்கினார்..

Tags

Next Story