பள்ளப்பட்டியில் வெற்றி பெற்ற கிரிக்கெட் அணிக்கு பரிசுகள் வழங்கல்

பள்ளப்பட்டியில் வெற்றி பெற்ற கிரிக்கெட் அணிக்கு பரிசுகள் வழங்கல்

கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசு வழங்கல்

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் வெற்றி பெற்ற கிரிக்கெட் அணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பள்ளப்பட்டியில் வெற்றி பெற்ற கிரிக்கெட் அணிக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா பள்ளப்பட்டி பகுதியில் செயல்படும் எகனாமிக் சேம்பர் என்ற பொது நல அமைப்பு சார்பாக கிரிக்கெட் தொடர்-2023 போட்டிகள் நடத்தப்பட்டது.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டில் ஆர்வமூட்டி சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்கும் நோக்கத்தில் இந்த கிரிக்கெட் தொடர் போட்டி. ஏற்பாடு செய்யப்பட்டது. Seniors (open category) மற்றும் Juniors (under 19 Category) ஆகிய இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. Senoirs பிரிவில் TCC A அணியும் Juniors பிரிவில் NCC B அணியும் வெற்றி பெற்று வெற்றிக்கோப்பை மற்றும் சுழற்கோப்பையை தட்டி சென்றனர்.

TCC A அணியின் கேப்டன் இம்தாதுல்லாஹ் (எ) தாலா பாய் மற்றும் NCC B அணியின் கேப்டன் அணியினர் கோப்பையை பரிசாக பெற்றனர். சிறப்பு பரிசுகளாக Man of The Series மற்றும் Emerging Player of the Tournament என்ற இரண்டு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டன.

Man of The Series கோப்பையை WRC அணியின் கேப்டன் காதரும், Emerging Player of the Tournament NCC B அணியின் கேப்டன் மர்ஜூக் ஆகியோருக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story