ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் போக்குவரத்து காவலர்களுக்கு பாதுகாப்பு உடை வழங்கல்

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் போக்குவரத்து காவலர்களுக்கு பாதுகாப்பு உடை வழங்கல்

பாதுகாப்பு உடைகள் வழங்கல்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் போக்குவரத்து காவலர்களுக்கு பாதுகாப்பு உடை வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் போக்குவரத்துக் காவல்துறையினருக்கு சீருடை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் ரோட்டரி சங்கத் தலைவர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். இதில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வரும் போக்குவரத்துக் காவலர்கள் 10 பேருக்கு பிரதிபலிப்பானுடன் கூடிய உடைகள் வழங்கப்பட்டன.

ரோட்டரிசங்கச் செயலர் ஆர். ஆனந்தகுமார், முன்னாள் தலைவர் சிட்டிவரதராஜன், எல்.சிவக்குமார், எஸ்.கதிரேசன் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்று காவல் துறை ஆய்வாளர் கே.செல்வராஜ், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் நடராஜன் ஆகியோரிடம் உடைகளை வழங்கினர்.

Tags

Next Story