வணிகர்கள் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்

வணிகர்கள் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இணைப்பு சங்கமான எலச்சிப்பாளையம் அனைத்து வணிகர் சங்கத்தின் மூலம் பெறப்பட்ட மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண பொருட்களை மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் மற்றும் எலச்சிப்பாளையம் சங்க தலைவர் ராமசாமி ஆகியோர் எலச்சிப்பாளையம் காவல் ஆய்வாளர் சிவக்குமாரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சங்க செயலாளர் சரவணன், அகரம் பஞ்சாயத்து தலைவர் லதா லட்சுமணகுமார், சங்க துணைச் செயலாளர் ரமேஷ், துணைத் தலைவர் கோவிந்தன், நிர்வாகிகள் தேவராஜன், தீபம் மூர்த்தி, ஆதிமூலம், மீராபாய் மற்றும் மாவட்ட பேரமைப்பு ஒருங்கிணைப்பாளர் சேந்தை கோபாலகிருஷ்ணன், இளைஞர் அணி செயலாளர் ராயல் பத்மநாபன், இணை செயலாளர் பிரபாகரன், அமைப்பாளர் மரக்கடை அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து வெப்படை அனைத்து வணிகர் சங்கம் மற்றும் நாமக்கல் மாவட்ட டயர் டீலர்ஸ் அசோசியேஷன் மூலம் பெறப்பட்ட நிவாரண பொருட்கள் நாமக்கல் நகராட்சி நிர்வாகம் மூலம் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. மோகனூர் அனைத்து வணிகர் சங்கத்தின் மூலம் பெறப்பட்ட நிவாரண பொருட்களை மாவட்ட துணை தலைவரும், சங்க தலைவருமான நடராஜன், மாவட்ட இணை செயலாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் மோகனூர் வட்டாட்சியரிடம் வழங்கினர்.

Tags

Next Story