ரூ.11 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கல்

ரூ.11 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கல்

 நிவாரண பொருட்கள் வழங்கல்

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டமக்களுக்கு 7ஆயிரம் தண்ணீர் பாட்டில்கள், 11, 808 பிஸ்கட் பாக்கெட், 2100 பிரட் பாக்கெட், 2926 ரஸ்க் பாக்கெட் , 5ஆயிரம் சேமியா பாக்கெட், 5100 ரவா பாக்கெட்டுகள், 5கி, அரிசி பை 1310 என ரூ.11 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் லாரி மூலம் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் சென்னைக்கு அனுப்பபட்டது. இதை திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ. சேக் முகையதீன் கொடியசைத்து அனுப்பி வைத்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், கலெக்டர், நேர்முக உதவியாளர் கோட்டைகுமார், தாசில்தார் சரவணகுமார், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி பங்கேற்றனர்.

Tags

Next Story