ராசிபுரம் மக்கள் நல குழு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கல்

ராசிபுரம் மக்கள் நல குழு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கல்

ராசிபுரம் மக்கள் நல குழு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கல்

ராசிபுரம் மக்கள் நல குழு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கல்

மிக்ஜாம் புயல் காரணமாக தொடர்ந்து பெய்த கடும் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் பல்வேறு சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் வழங்கி வருகின்றனர். அதன்படி சென்னையில் ஏற்பட்டுள்ள புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராசிபுரம் மக்கள் நல குழு சார்பில் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களான அரிசி, கோதுமை மாவு, சர்க்கரை, ரவை, துவரம் பருப்பு, எண்ணெய், பிஸ்கட், சோப்புகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், தனி துணை மாவட்டத் ஆட்சியர் -சமூக பாதுகாப்பு திட்டம் பிரபாகர், சமூக பாதுகாப்பு திட்டத்தனி வட்டாட்சியர்கள் பாஸ்கர், கிருஷ்ணன் ஆகியோரிடம் மக்கள் நல குழு நிர்வாகிகள் ஒப்படைத்தனா். இந்நிகழ்வில் குழுவின் தலைவர் வி.பாலு, கௌரவ தலைவர் ஜெயபிரகாஷ், செயலாளர் நல்வினை செல்வன், பொருளாளர் கா.முருகன், ஒருங்கிணைப்பாளர் ஜெ.சபீர், கல்விக் குழு பொறுப்பாளர் பா.மோகன்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story