சாயல்குடியில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே காற்றாற்று வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட பொதுமக்களுக்கு தனியார் நிறுவனம் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

விருதுநகர் வத்ராயிருப்பு பகுதில் இருந்து வந்த காட்டாற்று வெள்ளத்தால் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உணவின்றி தவிக்கும் நிலை உருவாகியுள்ள நிலையில் சேலத்தில் இருந்து பிக்ஸ்ராப் ஒய்.எப்.எக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்களான விஜய் ஆனந்த், ஜோசப் நிக்சன் ஆகியோர் சார்பாக அந்த நிறுவனத்தின் ஊழியர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர் சாயல்குடி அருகேயுள்ள நரிப்பையூர் கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான உணவுப்பொருட்கள் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் காரணமறவர் சங்க தலைவர் சிதம்பர நடராஜத்தேவர், நரிப்பையூர் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், ஆப்பநாடு மறவர் சங்க துணைத்தலைவர் சுந்தரகணபதி, ஒன்றிய கவுன்சிலர் முருகன், சமூக ஆர்வலர் சாயல்குடி ஜாபர்அலி பூசரிகான் மற்றும் மதிவேந்தன் அறக்கட்டளை செயலாளர் இராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story