வடலூர் இளைஞர்கள் நிவாரண பொருட்கள் வழங்கல்

வடலூர் இளைஞர்கள் நிவாரண பொருட்கள் வழங்கல்

நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த இளைஞர்கள்

வடலூர் இளைஞர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர்.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் இளைஞர்கள் ஒன்றிணைந்து நிதி திரட்டி சுமார் 2. 50 லட்சம் மதிப்பீட்டில் நிவாரண பொருட்களை சேகரித்து பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று நிவாரணப் பொருட்களை கொடுத்தனர்.

இதில் ஏராளமான சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இது மட்டும் இல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Tags

Next Story