முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்களின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்

முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்களின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்

நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர் 

முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்களின் சார்பில் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பினர்.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் - முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்களின் சார்பில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்கள், வியாழக்கிழமை அன்று, தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனரக வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டன.

இதில் வநேத்ரா முத்தாயம்மாள் இன்ஸ்டிடியூசன், முத்தாயம்மாள் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகள் ஆகியவை இணைந்து ஆடவர் மற்றும் மகளிருக்கான அத்தியாவசிய உடைகள், பாய் மற்றும் போர்வைகள் ஆகியவற்றை நிவாரண பொருட்களாக வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் வநேத்ரா குழுமத்தின் செயலாளரும், திராவிட முன்னேற்றக் கழக மாநில அயலக அணி துணை செயலாளருமான இரா. முத்துவேல் அவர்கள், வாகனத்தை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் வநேத்ரா முத்தாயம்மாள் இன்ஸ்டிடியூசனின் இயக்குநர்-கல்வி, முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசன் மற்றும் கல்வியியல், கல்லூரிகளின் முதல்வர்கள் முன்னிலை வகித்தனர்.

Tags

Next Story