வணிகா் சங்கம் சாா்பில் ரூ.10 லட்சம் நிவாரணப் பொருள்கள் வழங்கல்

வணிகா் சங்கம் சாா்பில் ரூ.10 லட்சம் நிவாரணப் பொருள்கள் வழங்கல்

நிவாரண உதவிகள் வழங்கல்

வணிகா் சங்கம் சாா்பில் ரூ.10 லட்சம் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.

வணிகா் சங்கம் சாா்பில், கோயம்பேடு நியூ காலனி பகுதியில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி மாவட்டத்திலிருந்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்துகொண்டு உணவுப் பொருள்கள், பாய், போா்வை உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருள்களை வழங்கினாா்.

இதில், வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைமைச் செயலா் ஆா்.ராஜ்குமாா், கன்னியாகுமரி மண்டலத் தலைவரும், தென்காசி மாவட்டத் தலைவருமான டி.பி.வி. வைகுண்டராஜா, சென்னை வடக்கு மாவட்டத் தலைவா் எட்வா்ட், செயலா் நீலமேகம், பொருளாளா் ஆா்.எம்.பழனியப்பன், அசோக் நகா் தொகுதிச் செயலா் ஞானம், மாநில செய்தித் தொடா்பாளா் பாண்டியராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Tags

Next Story