நாடார் மக்கள் பேரவை சார்பில் மரக்கன்றுகள் வழங்கல் 

நாடார் மக்கள் பேரவை சார்பில் மரக்கன்றுகள் வழங்கல் 
அய்யா அவதார தின விழாவில் மரக்கன்றுகள் வழங்கிய நாடார் மக்கள் பேரவை
தென்தாமரைகுளம் நாடார் மக்கள் பேரவை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
அய்யா வைகுண்டர் 192-வது அவதார தினவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளத்தில் இன்று நாடார் மக்கள் பேரவை சார்பில் அய்யாவழி பக்தர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நாடார் மக்கள் பேரவை மாநில கொள்கை பரப்பு செயலாளர் சுபாஷ் நாடார் கலந்து கொண்டு மரக்கன்றுகளை அய்யாவழி பக்தர்களுக்கு வழங்கினார். இதில் நாடார் மக்கள் பேரவை நிர்வாகிகள் வைகுண்ட மாமணி, பூபதி, செல்வமணி நாடார், பொன்னையா நாடார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story