ஊரகப்பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை 

ஊரகப்பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை 
அதிகாரி ஆய்வு
சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர்  பா.பொன்னையா ஊரகப்பகுதிகளுக்கு குடிநீர் வழங்குதல் தொடர்பாக ஆய்வு செய்தார். 

தஞ்சாவூர் மாவட்டத்தில், சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பா.பொன்னையா, மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் முன்னிலையில், ஊரகப்பகுதிகளுக்கு குடிநீர் வழங்குதல் தொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட அலுவலர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் மற்றும் குடிநீர் பணிகள் கள ஆய்வு நடைபெற்றது. இ

க்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் முனைவர் மு.பாலகணேஷ், செயற்பொறியாளர் (ஊ.வ) பொ.செல்வராஜ், செயற்பொறியாளர் குடிநீர் வடிகால் வாரியம், செயற்பொறியாளர் மின்சார வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மண்டல அலுவலர்கள்(ஊ.வ) கலந்து கொண்டனர். இ

க்கூட்டத்தில், வரும் கோடை காலத்தில் ஊரகப்பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story