தேசிய போட்டியில் மாவட்ட அமெச்சூர் கிக்பாக்சிங் அணி வீரர்கள் சாதனை

தேசிய போட்டியில் மாவட்ட அமெச்சூர் கிக்பாக்சிங் அணி வீரர்கள் சாதனை

சேலம் மாவட்ட அமெச்சூர் கிக்பாக்சிங் அணி வீரர்கள் தேசிய போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.


சேலம் மாவட்ட அமெச்சூர் கிக்பாக்சிங் அணி வீரர்கள் தேசிய போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள சத்ரபதி சிவாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் வாக்கோ இந்தியா தேசிய சப்-ஜூனியர் கிக் பாக்சிங் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணியின் சார்பில் பொதுச்செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில் சேலம் மாவட்ட அமெச்சூர் கிக்பாக்சிங் அணியின் வீரர்கள் ஸ்ரீ சூர்யா (28 கிலோ எடை), லக்சனா (48 எடை) ஆகியோர் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றனர். ஹர விருத்தி (42 எடை) பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதனை தொடர்ந்து பதக்கம் வென்ற மாணவர்கள் சேலம் மாவட்ட அமெச்சூர் கிக்பாக்சிங் சங்க தலைவர், மத்திய சட்டக்கல்லூரி தாளாளர் சரவணன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது துணைத்தலைவர் வக்கீல் மணிகண்டன், பயிற்சியாளர் பிரேம்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். இதற்கிடையே பதக்கம் வென்ற வீரர்கள் ஆகஸ்டு மாதம் ஹங்கேரியில் நடைபெற உள்ள உலக கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story