மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்ட கிராமசபைக்கூட்டம்

பிச்சாண்டம்பாளையம் ஊராட்சி வண்ணாங்காட்டுவலசில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார் இதன் அடிப்படையில் பிச்சாண்டம்பாளையம் ஊராட்சி வண்ணாங்காட்டுவலசில் நடைமெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார்.

இந்த கிராம சபை கூட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் எனவும் தொழுநோய் குறித்த விழப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர்.தொடர்ந்து நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மக்களின் குறைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

Tags

Next Story