மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

மதுராந்தகத்தில் மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு உண்டானது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற தமிழக அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராஜ் அவர்கள் வருகை தந்தார் இந்நிகழ்ச்சியில் 21 துறைகள் கலந்து கொள்கின்றன. இதில் மக்கள் தங்களை குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நிகழ்ச்சியாகும்.

இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் இந்நிகழ்ச்சிக்கு முன்பு மற்றொரு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ள சென்றதால் காத்திருந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் காரை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிகழ்ச்சியினை மாவட்ட நிர்வாகம் சரியான திட்டமிடல் செய்யாததால் இந்த பரபரப்பு நிலவியது. மீண்டும் பொதுமக்களின் வேண்டுதலை ஏற்று கூட்டத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் மனுக்களை பெற்றார்.

Tags

Next Story