பவானி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

பவானி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம்,பவானியில் உள்ள அரசு மருத்துமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
பவானி அரசு மருத்துவமனையினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது , பவானி அரசு மருத்துவமனையில் செயல்படும் பல் மருத்துவப் பிரிவு , மருந்து கிடங்கு , விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, சமையல் அறை, மகப்பேறு பிரிவு, இரத்த சேமிப்பு மையம், மகுந்தகம் உன்நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, மக்களை தேடி மருத்துவம், கர்ப்பப்பை பரிசோதனை அறை ஆகிய பிரிவுகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டிருந்தார். மேலும், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டு மேற்கொண்டார்.

Tags

Next Story