டார்ஜிலிங் செல்லும் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

டார்ஜிலிங் செல்லும் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

சாரண, சாரணியர் இயக்கம் சார்பாக தேசிய வனப்பயிற்சி முகாமிற்கு டார்ஜிலிங் அழைத்துச் சென்று வரப்பட்ட 54 மாணவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், சாரண, சாரணியர் இயக்கம் சார்பாக தேசிய வனப்பயிற்சி முகாமிற்கு டார்ஜிலிங் அழைத்துச் சென்றுவரப்பட்ட 54 மாணவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் சந்தித்து தங்கள் பயிற்சி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பங்கு பெற்ற மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் 13.05.2024 முதல் 17.05.2024 வரை தேசிய அளவிலான “அட்வன்ஜர் முகாம்” நடைபெற்றது. இம்முகாமில், திருவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 40 சாரணர்கள், 14 சாரணியர்கள் உட்பட 6 ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இம்முகாமில் சாரண, சாரணியர்களுக்கு மலையேறும் பயிற்சி, துப்பாக்கி சுடுதல், வில் எரிதல், கயிறு ஏறுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story