அண்ணாமலையார் கோவிலில் சிறப்பான செயல் செய்த கலெக்டர்

அண்ணாமலையார் கோவிலில் சிறப்பான செயல் செய்த கலெக்டர்

சாமி தரிசனம் செய்ய அழைத்து சென்ற போது

பங்குனி மாத பௌர்ணமி விழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை மாவட்ட ஆட்சியர் நேரடியாக சாமி தரிசனம் செய்ய அழைத்து சென்றார்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில், பௌர்ணமியை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியவர்களை நேரடியாக சாமி தரிசனம் செய்ய அழைத்து சென்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி. கார்த்திகேயன், மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story