அரூரில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் ஒரு பகுதியாக அரூர் சுற்றுவட்டாரத்தில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டார்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக இன்று அதிகாலை தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ,அரூர் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் வருகை குறித்தும் பேரூராட்சி பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் நீர் விநியோகம் செய்யும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி ஆய்வு செய்தார்.தொடர்ந்து அரூர் சிறப்பு நிலை பேரூராட்சி கோவிந்தசாமி நகர் பகுதியில் ரூ. 40,75,000 மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை ஆய்வு செய்து வளாகத்தில் கூடுதலாக மரக்கன்று நடும் பணிகளை துவக்கி வைத்தார். அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் உட்பட துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story