புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்

புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்

அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த ஆட்சியர்


கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கான்வாடி மையத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி 14-வது வார்டுக்குட்பட்ட ரயில்வே பீடர் ரோட்டில் பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியகிராம் திட்டத்தின் கீழ் ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் திறந்து வைத்தார். கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.


கவுன்சிலர் வேல்சங்கரி முத்துக்குமார், நகராட்சி ஆணையாளர் சுகந்தி, தி.மு.க. நகர செயலாளர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்கன்வாடி மாவட்ட திட்ட அலுவலர் ஜோஸ் பின் சகாய பிரமிளா, குழந்தை கள் நல அலுவலர் பர்கத் சுல்தானா வரவேற்றனர். விழாவில் பொறியாளர் அப்துல் காதர், இளநிலை பொறியாளர் கண்ணன், சுகாதார அலுவலர் பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் சிவா, தி.மு.க. வார்டு செயலாளர் ராமையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story