குடியரசு தின நிகழ்ச்சி குறித்து மாவட்ட ஆட்சியர் தகவல்

குடியரசு தின நிகழ்ச்சி குறித்து மாவட்ட ஆட்சியர் தகவல்

மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ 

குடியரசு தின நிகழ்ச்சி குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா சிறப்புடன் நடைபெற உள்ளது. நாளை காலை 8.2மணி அளவில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ விழா மேடைக்கு வருகை தருதல், அதனை தொடர்ந்து 8.5 மணி அளவில் தேசிய கொடியை ஏற்றி வைத்தல், 8.7 மணி அளவில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளுதல், 8.30 மணி அளவில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குதல் 8:45 மணி அளவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் 9.45 மணி அளவில் நாட்டுப்பண் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story