மே மாதத்திற்கான பருப்பு, பாமாயில் - கலெக்டரின் முக்கிய தகவல்

மே மாதத்திற்கான பருப்பு, பாமாயில் - கலெக்டரின் முக்கிய தகவல்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மே மாதத்திற்கான பருப்பு மற்றும் பாமாயிலை இந்த மாதம் 30 ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 லட்சத்து 46 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பொது வினியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மே மாதத்திற்கான பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வருகிற 30-ந் தேதி வரை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வட்ட வழங்கல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனவே,மே மாதம் பொருட்கள் பெற முடியாதவர்கள், அவர்களுக்கான மே மாத பொருட்களை இந்த மாதம் 30-ந் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story