சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்லத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்லத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மல்லிப்புதூர் ஊராட்சியில் சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்லத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், மல்லிப்புதூர் ஊராட்சியில், குழந்தைகள் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும்; சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்; ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளின் கல்வி உணவு, இருப்பிடம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டது.

குறித்து குழந்தைகளிடம் கேட்டறிந்தார். பின்னர், குழந்தைகளின் தனித்திறன்கள், விளையாட்டு விருப்பங்கள் மற்றும் இதர தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பள்ளிக்கல்வித்துறையின் கலைத்திருவிழாவில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்ல குழந்தைகள் பறை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பார்வையிட்டார்.

Tags

Next Story