திருவாரூரில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூரில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

திருவாரூர் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டம் பழையவலம் ஊராட்சியில் ரூபாய் 6.15 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கான கழிவறை கட்டப்பட்டுள்ளதையும், பழையவலம் ஊராட்சி கீழத்தெருவில் ரூபாய் 4.22 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும்,

பழையவலம் ஊராட்சியில் ரூபாய் 22.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் .

பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் .ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் மோகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story