பென்னாகரம் பகுதியில் நலத்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பென்னாகரம் பகுதியில் நலத்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் 

பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு நலத்திட்ட பணிகளை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் சுஞ்சல்நத்தம் ஊராட்சி மூலபெல்லூர் கிராமத்தில் PM JANMAN திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பணிகளை தரமாகவும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டிய அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கலெக்டர் சாந்தி தெரிவித்தார் அப்பகுதியில் பொதுமக்களுக்கு குடி தண்ணீர் வினியோகம் முறையாக வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தெரிவித்தார் உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேலன், விமலன் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story