மூன்று நாட்கள் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மூன்று நாட்கள் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மூன்று நாட்கள் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ஈரோடு மாவட்டத்தில் வருகின்றன ஜனவரி16,25,26 ஆகிய மூன்று நாட்களும் மதுக்கடைள் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம் (16.01.2024) மற்றும் வள்ளலார் நினைவு தினம் (25.01.2024) மற்றும் குடியரசு தினம் (26.01.2024) ஆகிய தினங்களை முன்னிட்டு "மது விற்பனை இல்லாத நாளாக" (Dry Day) அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, 16.01.2024, 25.01.2024 மற்றும் 26.01.2024 நாளன்று ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள் அதனுடன் இயங்கும் பார்கள், FL2 கிளப்கள் மற்றும் FL3 ஹோட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும் என்றும், அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story