துப்பாக்கியை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

துப்பாக்கியை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்

திண்டுக்கல் மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் பெற்ற உரிமைதாரர்கள் தங்களது படைக்கலன்களை உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க உத்தரவு

பொதுத்தேர்தல் 2024 அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளான 16.03.2024 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரப்பெற்றுள்ளது. எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் பெற்ற உரிமதாரர்கள் தங்களது படைக்கலன்களை உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைப்பு செய்து, உரிய ஒப்புதல் ரசீதினை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story