கள்ளச்சாராயம் குறித்து மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆய்வு

கள்ளச்சாராயம் குறித்து மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆய்வு

பச்சைமலை அருகே நெசக்குளத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட ஆட்சியர், போலீஸ் எஸ்.பி நேரில் ஆய்வு செய்தனர்.

பச்சைமலை அருகே நெசக்குளத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட ஆட்சியர், போலீஸ் எஸ்.பி நேரில் ஆய்வு செய்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பச்சைமலை அருகில் உள்ள நெசக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பச்சை மலைப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அங்கு இருந்த 250 லிட்டர் கள்ளச்சாராயத்தை கீழே ஊற்றிஅழித்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களை அழைத்து கள்ளச்சாரயத்தின் தீமைகளை எடுத்து கூறியதை தொடர்ந்து அந்த கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் மாவட்ட ஆட்சியர் முன்பாக மது போதைக்கு எதிராக இனி ஒருபோதும் எங்கள் கிராமத்தில் கள்ளச்சாராய உற்பத்தி நடக்காது, அதனை அனுமதிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் ஏராளமான போலீசார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story