சாலைப் பணியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

சாலைப் பணியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

தோவாளையில் சாலைப் பணியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.


தோவாளையில் சாலைப் பணியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், இன்று (08.05.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டத்தினை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் தோவாளை முதல் தாழக்குடி வரை ரூ.3.87 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சாலைப்பணி மற்றும் பாலப்பணியினை நேரில் பார்வையிட்டதோடு, அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

Tags

Next Story