தேசியக்கொடியின் மூவர்ணத்தில் ஜொலிக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேசியக்கொடியின் மூவர்ண வண்ணத்தில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஜொலிக்கிறது.
தேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது இதனை எடுத்துரைக்கும் வகையில், தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி,மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர் கற்பகம் உத்தரவின்படிஜனவரி 24ம் தேதி இரவு - 7:30மணி அளவில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் தேசிய கொடியின் மூவர்ண நிறத்தில், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கப்பட்டன இதனை ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் மற்றும் ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் நேரில் பார்வையிட்டனர். மேலும் இதன் மூலம் தேசிய வாக்காளர் தினத்தையும், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் வகையில் இச்செயல் அமையப்பெற்றன என்பது குறிப்பிட தக்கது.

Tags

Next Story