மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு கூட்டம்

மாவட்டக்குழு கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தர்மபுரி நகராட்சி அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பேசினார். தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக அரசு கடந்த பத்தாண்டுகளில் கடைபிடித்து வந்த மக்கள் விரோத கார்ப்பரேட் ஆதரவு - வகுப்புவாத நடவடிக்கைகள் காரணமாக நாடு கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.. தேர்தல் பத்திர ஊழலில் சிக்கிய பாஜக நாடு முழுவதும் அம்பலப்பட்டு நிற்கிறது. மறுபுறம் இந்தியா கூட்டணி வலுவுடன் முன்னேறி வருகிறது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தொகுதிப்பங்கீட்டை முடித்து, தேர்தல் களமிறங்கி விட்டது. தருமபுரி தொகுதியில் சாதி, மத வெறிச் சக்திகளையும், அதிமுக - வையும் வீழ்த்திட, திமுக வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வாக்குச்சாவடி வாரியாக தீவிரமாகக் களப்பணி ஆற்றுவது, திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டது

Tags

Next Story