சிவகங்கையில் மாவட்ட மாநாடு

சிவகங்கையில் மாவட்ட மாநாடு

மாவட்ட மாநாடு 

சிவகங்கை மாவட்ட கட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , ஏஐடியுசி ஆட்டோ தொழிற்சங்க சார்பில் ஜனவரி 10ஆம் தேதி மாவட்ட மாநாடு ‌நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மாவட்ட கட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏஐடியுசி ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட மாநாடு மற்றும் மாநில மாநாடு சம்பந்தமாக நகர நிர்வாகிகள் கூட்டம் ஆட்டோ சங்க நகரச் செயலாளர் பாண்டி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏஐடியுசி ஆட்டோ சங்கர், மாவட்ட செயலாளர் ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் மருது, ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலாளர் சகாயம் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வருகின்ற 10ஆம் தேதி சிவகங்கையில் மாவட்ட மாநாடு நடத்துவது என்றும், மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஆட்டோக்களுக்கு கேஸ் நிரப்பும் பெட்ரோல் பங்க் உடனே சிவகங்கையில் திறக்க வேண்டும் என்றும், சிவகங்கைக்குள் இன்டேன் கேஸ் வாகனம், உடைகுளம் மதுபான ஆலை வாகனம் ஆகியவற்றை அனுமதிக்க கூடாது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Tags

Next Story