குமாரபாளையத்தில் நிர்வாகிகளை மறந்த மாவட்ட தி.மு.க செயலாளர்

குமாரபாளையத்தில் நிர்வாகிகளை மறந்த மாவட்ட தி.மு.க செயலாளர்

திமுக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

குமாரபாளையத்தில் நிர்வாகிகளை மறந்த மாவட்ட தி.மு.க செயலாளர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வடக்கு தி.மு.க. சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடந்தது. நகராட்சி தலைவரும், வடக்கு நகர பொறுப்பாளருமான விஜய்கண்ணன் தலைமை வகித்தார். இதில் தொகுதி பொறுப்பாளர் தங்கராசு, நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள்,

மாவட்ட, நகர, வார்டு நிர்வாகிகள், மகளிரணியினர், மேலும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், சி.பி.ஐ., சி.பி.எம்., தி.க., விடுதலை சிறுத்தைகள், சிறுபான்மை அமைப்பினர்,என பெரும்பாலோர் பங்கேற்றனர். மதுரா செந்தில் பேச தொடங்கி,தி.மு.க. சாதனைகள், நகராட்சியில் செய்த பணிகள் குறித்து பேசிவிட்டு,

முன்னாள் அமைச்சர் தங்கமணியை குறை சொல்லிவிட்டு பேச்சை நிறைவு செய்தார். முடிவில் நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன் நன்றியுரை கூறினார். அனைவரும் செல்லத் தொடங்கினர். அதன் பின் ஞானோதயம் வந்தாற்போல், மைக்கை எடுத்த மதுரா செந்தில், மன்னிக்கவும், பேச்சின் தொடக்கத்தில், யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்று கூறி, தலைமை வகித்தவர், தெற்கு நகர பொறுப்பாளர்,

மூத்த தி.மு.க. நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர், கவுன்சிலர்கள், மாவட்ட, நகர, வார்டு நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், மகளிரணியினர் என அனைவர் பெயரையும் குறிப்பிட்டு, வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றார். கூட்டத்தில் இருந்தவர்கள், தேர்தலுக்கு முன்பே அனைவரையும் மறக்கும் இவர், தேர்தல் முடிந்தால், நினைவு வைத்து இருப்பாரா? என கேட்டபடி கலைந்து சென்றனர்.

Tags

Next Story