மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024, சென்னை மாவட்டத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் கூடுதல் தலைமைச் செயலாளரும் மாநகராட்சி ஆணையாளருமான ராதாகிருஷ்ணன், இன்று (13.04.2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மண்டல அலுவலர் சீனிவாசன், செயற்பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story