திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம்.


திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையின் சார்பில் மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில அளவிலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் நவம்பர் மாதத்திற்கான தரவரிசை பட்டியலில் ஓமலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மாநில அளவில் முதலிடம் பெற்றமைக்காக மருத்துவருக்கு பாராட்டுச் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் பவன் குமார்ஜிகிரியப்பனவர், உதவி ஆட்சியர் பயிற்சி கிருத்திகா, விஜயன், துணை மேயர் பாலசுப்பிரமணியம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன், இணை இயக்குனர் மருத்துவ பணிகள்) கனகரணி,துணை இயக்குனர் ஜெகதீஷ் குமார்,மாநகர நல அலுவலர் கௌரி சரவணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story