கம்பன் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கம்பன் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கம்பன் கழக நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைப்பெற்றது.

கள்ளக்குறிச்சி கம்பன் கழக நிறுவன தலைவர் சுலைமான் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கோமுகி மணியன், செயற்குழு உறுப்பினர்கள் நல்லாப்பிள்ளை, அருள்ஞானம், ஜெயப்பிரகாஷ், ரங்கராஜன் முன்னிலை வகித்தனர். கஸ்துாரி இளையாழ்வார், செயலாளர் மதிவாணன் வாழ்த்திப் பேசினர். துணைத்தலைவர் கோவிந்தராஜன் வரவேற்றார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட கம்பன் கழக எதிர்கால செயல்பாடுகள், கம்ப ராமாயணத்தின் பாத்திரங்களின் சாராம்சங்கள் குறித்து இக்கால பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே கொண்டு செல்லும் நோக்கில் பட்டிமன்றம், கவியரங்கம், பேச்சரங்கம் நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கவிஞர்கள் ராமமூர்த்தி, ஆனந்தி, சங்கர், காய்தரி, சிவப்பிரகாசம், சாதிக்பாட்சா, அறிவழகன், சொல்முரசு, தமிழரசி, சண்முகபிச்சை உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் அம்பேத்கார் நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story