அரசு பள்ளியில் வட்டார அளவிலான கலைதிருவிழா

அரசு பள்ளியில் வட்டார அளவிலான கலைதிருவிழா

கலை திருவிழா


சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டார பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 6 வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கான போட்டிகளில் நான்கு பேர் முதல்பரிசினையும், 7 பேர் 2வது பரிசினையும், ஒரு மாணவர் 3ம் பரிசினையும் பெற்றுள்ளனர்.

அதே போல் 9ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகளில் நான்கு பேர் முதல் பரிசினையும், 8 பேர் 2ம் பரிசினையும், இரண்டு பேர் 3ம் பரிசினையும் பெற்றுள்ளனர். ஆறாம் வகுப்பு மாணவர் பிரகதீஸ்வரன் கதை சொல்லுதல், கவிதை போட்டிகளில் முதலிடத்திலும், நகைச்சுவை வழங்குதல், நாடக போட்டிகளில் 2வது இடத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.

8ம் வகுப்பு மாணவர் பெ.த.சங்கமேஸ்வரன் பேச்சு, செவ்வியல் பாட்டு போட்டிகளில் முதலிடத்திலும், கட்டுரை, நாடகம் போட்டிகளில் 2வது இடத்திலும் வெற்றி பெற்றுள்ளார். 9ம் வகுப்பு மாணவர் த.சந்திரபாண்டியன் இணைய கருத்து உருவாக்கம் போட்டியில் முதலிடத்திலும், விவாத போட்டியில் 2வது இடத்திலும் வெற்றி பெற்றுள்ளார். 9ம் வகுப்பு வகுப்பு மாணவர் சச்சின் பெர்னாண்டஸ் கீ போர்டு போட்டியில் முதலிடத்திலும், மவுத் ஆர்கான், மெல்லிசை போட்டிகளில் 2வது இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைகுழு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story