மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி - வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு

மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி -  வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு

பரிசு வழங்கல் 

திருப்பூர் பெருந்தொழுவு ரோட்டில் உள்ள ப்ரண்ட்லைன் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை பள்ளி தாளாளர் சிவசாமி வழங்கினார்.
திருப்பூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி திருப்பூர் தி பிரண்ட்லைன் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி கிளப் ஆப் திருப்பூழ் தலைவர் சுப்பிரமணியன், தி பிரண்ட்லைன் பள்ளி தாளாளர் சிவசாமி, பள்ளி செயலாளர் சிவகாமி, பள்ளி இயக்குனர் சக்தி நந்தன், இணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் திருப்பூர் மாவட்ட சதுரங்க பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கிவைத்தனர். இந்த போட்டிகள் 6 சுற்றாக நடைபெற்றது. போட்டிகள் 9,12,15 வயதுக்குரிய பிரிவில் நடந்தது. இதில் மொத்தம் 60 கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பொது பிரிவில் 10 பரிசுகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்க பணம் வழங்கப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குனர் சக்திநந்தன், இணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன், ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். பல்வேறு பிரிவுகளில் பிரண்ட்லைன் பள்ளி மாணவ,மாணவிகள் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story