மாவட்டத்தில் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

மாவட்டத்தில் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

குறைத்தீர் கூட்டம் 

விழுப்புரம் மாவட்டத்தில் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கோட்ட அளவிலான மாதாந்திர மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மாதந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் காலை 11மணியளவில் நடக்கிறது. அதன்படி, வருகிற 11-ந்தேதி கண்டமங்கலம் கோட்ட மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் அங்குள்ள செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 18- ந்தேதி செஞ்சி கோட்ட மின்நுகர்வோர் குறைகேட்புகூட்டம் அங்குள்ள செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 25-ந்தேதி திண்டிவனம் கோட்ட மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் அங்குள்ள செயற்பொறியாளர் அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.

எனவே, மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள், இக்கூட்டத்தில் நேரில் கலந்துகொண்டு மின்சாரம் சம்பந்த மான குறைகளை தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த தகவலை மேற்பார்வை பொறியா ளர் லட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story