நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி

நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி

போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் 

நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியும், சேலம் மாவட்ட கால்பந்து சங்கமும் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான 4-ம் ஆண்டு நாலெட்ஜ் டிராபி- 2024 கால்பந்து போட்டியை கல்லூரி விளையாட்டு திடலில் நடத்தின.

போட்டியை கல்லூரி துணை முதல்வர் விசாகவேல், நிர்வாக அலுவலர் சக்திவேல், மாவட்ட கால்பந்து சங்க துணை செயலாளர் ஜெயபால் ஆகியோர் பேசினர். போட்டியில் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதியில் சேலம் கிளேஷிபுரூக் மெட்ரிக் பள்ளி முதலிடமும், சிறுமலர் பள்ளி 2-வது இடமும், கிளேஷிபுரூக் பப்ளிக் பள்ளி 3-வது இடமும் பிடித்தனர்.

போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியின் மாணவர் நலன் இயக்குனர் நவநீதகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர் சக்திவேல், மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் முரளிதரன், துணை செயலாளர் ஜெயபால் ஆகியோர் சுழற்கோப்பைகள்,

சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். போட்டியில் ஆட்டையாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் ரித்தீஷ் சிறந்த தடுப்பாளர் விருதையும், கிளேஷிபுரூக் பப்ளிக் பள்ளி மாணவன் நித்தீஷ் சிறந்த முன்னணி ஆட்டக்காரருக்கான விருதையும், கிளேஷிபுரூக் மெட்ரிக் பள்ளி மாணவன் சதாசிவம் சிறந்த தடுப்பாட்டக்காரருக்கான விருதையும் தட்டி சென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பள்ளி நிர்வாகத்தினருக்கும் நாலெட்ஜ்

பொறியியல் கல்லூரி நிறுவனர் சீனிவாசன், அறக்கட்டளை செயலாளர் குமாரசாமி, தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர் வாழ்த்தினர். கல்லூரி உடற்கல்வி இயக்குனர்கள் தேவி, மணிகண்டன் ஆகியோர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story