மாவட்ட அளவிலான கபடி மற்றும் கையுந்து பந்து போட்டி

மாவட்ட அளவிலான கபடி மற்றும் கையுந்து பந்து போட்டி

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள செ.நாச்சிப்பட்டில் இயங்கி வரும் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் அமரர் செல்வ நாராயண ரெட்டியார் அவர்களின் நினைவாக கல்லூரி சார்பில் மாவட்ட அளவிலான கபடி மற்றும் கையுந்து பந்து போட்டி இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு சக்தி பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் அக்ரி.எஸ்.வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் செந்தில்முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். செல்வநாராயண ரெட்டியார் அறக்கட்டளை உறுப்பினர் ரேகாரெட்டி, மாவட்ட ரெட் கிராஸ் சங்க தலைவர் இந்தரராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பல்வேறு அரசு, தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் சுமார் 2500 பேர் இந்த விளையாட்டு போட்டியில் பதிவு செய்து கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து கையுந்து பந்து போட்டியை கல்லூரி தாளாளர் அக்ரி.எஸ்.வெங்கடாஜலபதி தொடங்கி வைத்து விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மதிய உணவு கல்லூரி கல்லூரி வளாகத்தில் வழங்கப்பட்டது.

Tags

Next Story