தம்மம்பட்டியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி

தம்மம்பட்டியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி

சேலம் கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் தம்மம்பட்டியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது

சேலம் கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் தம்மம்பட்டியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களில் 71 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டும் சேலம் கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக சேலம் கிழக்கு மாவட்ட அளவிலான மாபெரும் கபடி போட்டி முனைவர் கெ.சு.தங்கபாண்டியன் மாவட்ட துணை அமைப்பாளர் விளையாட்டு மேம்பாட்டு அணி அவர்களின் ஏற்பாட்டில், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் பிரண்ட்ஸ் டி ரமேஷ் தலைமையில் பேரூர் கழக பொறுப்பாளர் ந.சண்முகம் வரவேற்புரை ஆற்றினார்.

ஒன்றிய கழகச் செயலாளர் திரு ஆர் சித்தார்த்தன் முன்னிலையில் ,கிழக்கு மாவட்ட அவை தலைவர் திரு.மு.ரா கருணாநிதி அவர்கள் கோப்பை மற்றும் பரிசு தொகை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட துணை அமைப்பாளர் விளையாட்டு மேம்பாட்டு அணி ஏற்காடு ரமேஷ் பாபு, சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் முனைவர் வரத ராஜசேகர், மாவட்ட அமைப்பாளர் சிறுபான்மையினர் அணி சையது சாவலி, பேருர் துணை நகர செயலாளர் கலிவரதன், பேரூர் மன்ற கவுன்சிலர்கள் நடராஜன், திருச்செல்வம், ரமேஷ்,நித்தியா செந்தில்குமார், செந்தில்,சமீனா பேகம்,காவியா சேகர், டெல்லி (எ)ராஜகோபால்,பெருமாள்,ம. முரளி,வித்தியாசாகர்,வார்டு செயலாளர் சதீஷ்,வெங்கடேசன்,முன்னாள் நகர பொருளாளர் ராபின், முன்னாள் நகர பொருளாளர் ரவி,இளைஞர் அணி வினோத், கண்ணன்,அஷென்பாசா.சந்ரு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் தம்மம்பட்டி B அணி முதல் பரிசு தம்மம்பட்டி வீரபாண்டியார் அணி இரண்டாம் பரிசு கெங்கவல்லி பேரூர் மூன்றாம் பரிசு பெத்தநாயக்கன்பாளையம் நான்காம் பரிசு வென்றார்கள்.

Tags

Next Story