விழுப்புரத்தில் மாவட்ட அளவில் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி

விழுப்புரத்தில் மாவட்ட அளவில் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி

போட்டியை தொடக்கி வைத்த நிர்வாகிகள்

விழுப்புரம் மாவட்ட அளவில் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை ஸ்போர்ட்ஸ் கராத்தே டூ அசோசியேஷன் சார்பில் விழுப்புரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். உள்விளையாட்டு அரங்கில் 2024-ம் ஆண்டிற்கான மாவட்ட கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

இதில் 300-க்கும் மேற்பட்ட கராத்தே மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை நிரூபித்தனர். இப்போட்டியை தொடங்கி வைத்த முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஜனகராஜ், போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயக்குமாரி, விழுப்புரம் ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாக அதிகாரி எமர்சன் ராபின்சன், சட்ட ஆலோசகர்கள் துரை சாமி, வைத்திநாதன், கராத்தே சங்க நிர்வாகிகள் கோபாலகிருஷ் ணன், ரகுராம், சேதுராமன், தினேஷ்குமார், சுவாதி, குருநாதன். ஏழுமலை, முரளிராஜன், ஆனந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சங்கத்தின் தலைவர் செல்வக்குமார், செயலாளர் தீனதயாளன், பொதுச்செய லாளர் கராத்தே முருகன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் சங்க பொருளாளர் கிருபாகரன் நன்றி கூறினார்.

Tags

Next Story